|
- எல்லா மக்களையும் அனுதினமும் இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டே கடமைகளைக் செய்ய வைப்பது.
- தமிழ்நாட்டில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பிரம்ம முகூர்த்தத்தில், அதாவது அதிகாலையில் மக்களை எழ வைத்து இறை வணக்கம் செய்ய வைப்பது.
- அரசியலில் ஈடுபட்டு இருக்கும் இளைஞர்களை அணுகி அவர்களை தருமம் நிறைந்த ஆன்மீகம் கலந்த அரசியல்வாதிகளாக்க இறை உணர்வுபடி தியான பயிற்சியளிப்பது.
- படித்த பட்டதாரிகள், அரசாங்க அதிகாரிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள் வழக்கறிஞர்களிடையே தெளிவாக ஆன்மீக கருத்துக்களை கூறி பயிற்சியளித்து அவர்களை உண்மையான தெய்வீகம் கலந்த நம்நாட்டின் நல்ல நிர்வாகிகளாக்க முயற்சிப்பது.
- எல்லா மதங்களும் இறைவனைப் பற்றியதாக இருப்பதால் அக்கருத்துக்களை மதிப்பது, ஆனால் நமது பாதையில் பிறருக்கு இடையூரு இல்லாமல் இறைவனை நோக்கி பயணிப்பது.
- மக்களை மதிப்பது, மனித நேயம் வளர்ப்பது, இறைவனை நினைப்பது, முடிவில் இறைவனோடு கலப்பது.
|
|